:
நிதானம் பொறுமை பொருத்துகொள்ளும் தன்மை, விடா முயற்சி சாந்தம் இலட்சியம் நம்பிக்கை நாணயம் விஸ்வாசம் சோம்பேறித்தனம் தைரியம் உஷார் பிடிவாதம் நிர்ணயம் ஆகியவையும் அவற்றிற்கு எதிரானவையும் சுபாவத்தை சேர்ந்தவை..
அவன் அப்படி தான் ...அவன் சுபாவம் மாறாது என்பது எவ்வளவு உண்மையோ அப்படி தான் நம் சுபாவமும் மாறாத ஒன்று...
நிதானம் உள்ளவன் ஜெய்க்கும் இடத்தில அவசரம் உள்ளவன் தோற்பான்..மற்ற எல்லா திறைமைகளும் இருவருக்கும் ஒன்று போல் இருந்தாலும் நிதானம் செய்து கொடுக்கும்..அவசரம் தோல்வியை பெற்று தரும்..
ஒரு முறை தோற்றபின் அந்த வேலையை மறந்து விடுபவர் விடாமுயற்சி உடையவருடைய வெற்றியை எதிர் பார்க்க முடியாது ..நடத்தை மேலெழுந்த வாரியாக உள்ளது...அதனால் அடிப்படையான காரியங்களை சாதிக்க முடியாது..குணம் அவசியம் என்றாலும் அஸ்திவாரம் போடா குணம் போதாது..
மற்றவர் அஸ்திவாரம் போட்டு எழுப்பிய காரியங்களை நிர்வாகம் செய்ய குணம் உதவும்..தன நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர..சுபாவத்தில் திறன் இருக்க வேண்டும்...
இவற்றை எல்லாம் மனதில் கொண்டு ..நாம் மற்றவர் எவரையும் ஆராய்ந்து பார்க்காமல் நம் வாழ்கையை ஆராய்சிக்கு எடுத்து கொள்வோம்..முதலில் நல்லது கெட்டது பிரிந்து தெரியும்..கெட்டது விளக்கப்பட வேண்டியது என்பதில் மாற்று கருத்து இல்லை..க்ஷணம் தாமதிக்காமல் கெட்டதை விலக்க முன் வர வேண்டும்..இந்த நிலையில் மற்றவர் அனைவரும் நாம் எதிர்பார்ப்பது போல் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தெரியும்..
அதை விட்டு விட்டு..நியாமானது சரியானதை மட்டும் செய்ய முன் வர வேண்டும்...
இதுவே சிறப்பு சேர்பதற்கான முன்னேற்ற பாதை...
தீயன விலக்கி.... நல்லன கைக்கொண்டு, நிதானம் கடைபிடித்து வாழ்வில் வெற்றி பெறுவோம்...
ReplyDeleteநல்லா இருக்கு வைஷ்... இன்னும் நிறைய எழுது...